வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 25 ஜூன் 2014 (14:32 IST)

திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சில தேமுதிக நிர்வாகிகள் கட்சிப் பதவியிலிருந்து நீக்கம்

தேமுதிக நிர்வாகிகள் சிலர் கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
 
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக துணை செயலாளராக செயல்பட்டு வந்த எஸ்.ஜெயச்சந்திரன், அவர் வகித்து வந்த கழக பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
 
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்டம், பழனி நகர கழக செயலாளராக செயல்பட்டு வந்த டி.வெங்கட சுப்பிரமணி, அவர் வகித்து வந்த கழக பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.