வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (18:19 IST)

பம்மிய விஜயகாந்த்: ஃபீனிக்ஸ் பறவையின் கூடு விட்டு கூடு பாய்ந்த தந்திரம்!

மறந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அப்துல் கலாம் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த வந்தார் விஜயகாந்த்.


 
 
முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் ஆஜராகாததால் திருப்பூர் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.
 
இதனால் காவல்துறை விஜயகாந்தையும், பிரேமலதாவையும் கைது செய்ய விரைந்துள்ளதாக தகவல்கள் பரவியது. இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது.
 
இந்ந்நிலையில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்து வந்த விஜயகாந்த் காவல்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வழக்கமாக வரும் காரில் வராமல் வேறு காரில் பகல் 11:30 மணிக்கு ரகசியமாக வந்து அப்துல் கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு பத்தே நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.