1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (15:07 IST)

வைகுண்டராஜன் 10 ஆயிரம் கோடி தாது மணல் கொள்ளையடித்தார்: குண்டு வீசும் சகோதரர்

வைகுண்டராஜன் 10 ஆயிரம் கோடி தாது மணல் கொள்ளையடித்தார்: குண்டு வீசும் சகோதரர்

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் தாது மணல் எடுத்து வரும் வைகுண்டராஜன் தாது மணல் கடத்தியதாகவும், இதனால் அரசுக்கு 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது சகோதரர் குமரேசன் கூறியுள்ளார்.


 
 
வி.வி. குரூப்ஸ் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் வைகுண்டராஜன் தாதுமணல், சிமெண்ட், கல், குடிநீர், சர்க்கரை ஆலை, அரிசி ஆலை மற்றும் கல்லூரிகள் போன்ற ஏராளமான நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் இவர் தாது மணல் கடத்தியதாக அவரது சகோதரர் குமரேசன் கூறியுள்ளார். இதனால் அரசுக்கு 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், அந்த ஆதாரங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.