வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (09:14 IST)

வைகோவின் முதல் தொகுதிக்கும் கடைசி தொகுதிக்கும் வந்த சிக்கல்!

அரசியலில் வைகோவை ஒரு ராசியில்லாத மனிதர் என்றும், அவர் எந்த கூட்டணியில் இருக்கின்றாரோ அந்த கூட்டணி தோல்வி அடையும் என்றும் கடந்த சில வருடங்களாக ஒரு செண்டிமெண்ட் வதந்தி பரவி வருகிறது.
 
இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக வைகோ தனது பிரச்சாரத்தை தொடங்கிய முதல் இடம் வேலூர். அதேபோல் அவர் கடைசியாக தேர்தல் பிரச்சாரம் செய்த இடம் கோவில்பட்டி. இது தூத்துகுடி தொகுதியில் உள்ளது
 
எனவே இந்த இரண்டையும் காரணம் காட்டி மீண்டும் வைகோ குறித்து ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்த முதல் தொகுதியில் தேர்தல் நின்றுவிட்டது என்றும், அவர் கடைசியாக தேர்தல் பிரச்சாரம் செய்த இடத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் நெட்டிசன்கள் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.
 
ஆனால் இந்த வதந்திக்கு திமுகவினர்களும், மதிமுகவினர்களும் பதிலடி கொடுத்து வருவதால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது