வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2016 (16:16 IST)

அன்புநாதன் வீட்டில் சிக்கிய ரூ.5 கோடி நத்தம் விஸ்வநாதனுடையது: வருமான வரித்துறை அதிரடி!

அன்புநாதன் வீட்டில் சிக்கிய ரூ.5 கோடி நத்தம் விஸ்வநாதனுடையது: வருமான வரித்துறை அதிரடி!

கடந்த சட்டசபை தேர்தலின் போது கரூரில் அன்புநாதன் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையில் ரூ.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பணம் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானது என்ற தகவல் வந்துள்ளது.


 
 
சமீபத்தில் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பின்னர் கரூரில் அன்புநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் பணம் நத்தம் விஸ்வநாதனுக்குரிய என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் தற்போது நடைபெற்ற சோதனையில் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
அன்புநாதனுக்கும், நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத்துக்கும் இடையே, தொழில் ரீதியான தொடர்பு இருந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சிக்கிய பணம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் அனுப்பியது உறுதியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.