வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 ஜூன் 2015 (17:53 IST)

தேர்தல் தோல்வி; 2 மாணவர்கள் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை

ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் 2 பேர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 
மதுரை மேலக்கோட்டை ஹவுசிங்போர்ட் பகுதியைச் சேர்ந்த சமையல் வேலை செய்துவரும் முனியப்பன் மகன் சங்கரபாண்டி (16).  அதேபோல் ஏ.தொட்டியபட்டியை சேர்ந்த பெட்டிக்கடை நடத்திவரும் பாண்டியம்மாள் மகன் சஞ்சய் கண்ணன் (16) இருவரும் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
 
இருவரும் 9ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தனர். விடுமுறைக்கு பின் பள்ளி திறந்ததை அடுத்து இருவரும் பள்ளிக்கு சென்று வந்தனர். இருப்பினும் மனமுடைந்த நிலையிலேயே இருந்துள்ளனர்.
 
இந்நிலையில், நேற்று மாலை இருவரும் டியூசன் சென்ற திரும்பவில்லை. பெற்றோர்கள் இருவரையும் தேடிவந்த நிலையில், இன்று காலை திருமங்கலம் - விருதுநகர் சாலையில் உள்ள தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரது உடல்களும் கிடந்தன.
 
ரயில் ஏறியதில் இருவரது தலைகளும் துண்டிக்கப்பட்டன. இதில் சங்கரபாண்டி தலை மட்டும் மீட்கப்பட்டது. ஆனால் சஞ்சய் கண்ணணின் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. ரயில்வே காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.