வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வியாழன், 4 மே 2017 (05:44 IST)

ஆதாரத்தை காண்பித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன். 'வாணி ராணி' சபீதா

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தி ஒன்றில் 'வாணி ராணி' தொடர் சபிதா அந்த தொடரின் மேனேஜருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்ததாகவும், நள்ளிரவில் அவருடைய வீட்டில் அடிதடியில் இறங்கியதாகவும் செய்தி வெளீயிட்டது. இந்த செய்தி ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்\ற சமூக ஊடகங்களிலும் வெகுவேகமாக பரவியது. இந்த சம்பவத்திற்கு ஏற்கனவே சபீதா விளக்கம் அளித்த நிலையில் தற்போது ஃபேஸ்புக்கில் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்



அந்த சம்பவம் நடந்தது உண்மைதான், அந்த வீடியோவில் இருப்பதும் நான் தான். ஆனால் அந்த செய்தியில் சொல்லப்பட்டிருந்த காரணம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் கடனாக கொடுத்திருந்த பணத்தை கேட்கவே அவரது வீட்டிற்கு சென்றேன். அந்த வீடியோவை எடுத்த சேனல்காரர்களோ அல்லது வேறு யாரோ, நான் அவருடைய வீட்டில் இரண்டு நாள் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை காண்பித்தால் தற்கொலை செய்து கொள்ள தயார் என்று கண்ணீருடன் சவால் விட்டுள்ளார்

உங்களுக்கு அது ஒரு நாள் செய்தி. ஆனால் எனக்கு என் வாழ்நாளே வெற்றிடமாகிவிட்டது. தயவுசெய்து செய்தி போடுவதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையை அறிந்து போடுங்கள் என்று சபீதா கேட்டுக்கொண்டார்

சபீதாவின் முழு வீடியோவை பார்க்க...https://www.facebook.com/pg/sulpikarspider2/videos/