வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2017 (12:24 IST)

ஒயிட் ஒயின்தான் வேண்டும் ; அடம் பிடித்த எம்.எல்.ஏக்கள் : ரிசார்ட்டில் கும்மாளம்

பாண்டிச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு ராஜ உபச்சாரம் நடத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 

 
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் அணி இனைந்த பின், அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது. 
 
மேலும்,  தங்கள் வசம் உள்ள எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணி பக்கம் சென்று விடக்கூடாது எனக் கருதிய தினகரன் தரப்பு, அவர்களை பாண்டிச்சேரியில் உள்ள விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்க வைத்தது. நேற்று இரவு 8 மணியளவில் அவர்கள் அனைவரும் அங்கு சென்றனர். 


 

 
இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் ரிசார்ட்டில் உயர் ரக மது பாட்டில்களை ருசித்தனர் எனவும்,அதில் இரண்டு எம்.எல்.ஏக்கள் பிரான்சு நாட்டில் தயாரிக்கப்படும் ஒயிட் ஒயின்தான் வேண்டும் என அடம்பிடித்து, அடில் இரண்டு ஃபுல் பாட்டில்களை வாங்கி ருசித்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. நேற்று இரவு தொடங்கிய மதுவிருந்து இன்று அதிகாலை வரை தொடர்ந்ததாம். அதனால், 5 எம்.எல்.ஏக்களை தவிர மற்றவர்கள் காலை 10 மணி வரையும் கூட எழுந்திருக்கவே இல்லை என்பது தெரியவந்துள்ளது.