வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya
Last Updated : வியாழன், 12 ஜனவரி 2017 (11:50 IST)

பீட்டாவுக்கும், ஜல்லிக்கட்டு தடைக்கும் காரணம் இந்த நடிகை தான்!!

திரிஷாவின் மூலமாக தான் பீட்டா [PETA] என்ற வார்த்தை தமிழகம் முழுவதும் பரவியது. மிருக வதைக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்த இயக்கத்தில் த்ரிஷாவின் மூலமாக திரைத்துறை பிரபலங்கள் இணைந்தனர்.


 

சாலைகளில் திரிந்துகொண்டிருந்த நாய்களை மனிதநேயத்தின் அடிப்படையில் திரிஷா ஆதரவளித்தார். அப்போது திரிஷாவின் செயல்களை ஊக்குவித்து நாய்களை கொண்டுசென்றவர்கள் பீட்டா அமைப்பினர்.

அப்போது, திரிஷாவின் செயலைக்கண்டு, அவரைப்போலவே ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவ பலர் முன்வந்தனர். பீட்டா தமிழகத்தில் பரவிய அதேசமயம் இந்திய நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

மீண்டும், பெங்களூரில் நாய்களைக் கொன்று குவித்த போது  உண்ணாவிரதம் இருந்த வரலட்சுமியுடன், அவரது நெருங்கிய நண்பரான விஷால் பீட்டா ஆதரவாளரானார்.

அதன்பிறகு, விஷாலின் ஆதரவு பீட்டா இயக்கத்துக்கு பக்கபலமாக இருந்ததால் அவர்களது சார்பாக விருது வழங்கி கௌரவித்தார்கள். அப்போது தான், விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தனது கருத்தைத் தெரிவித்தார்.

அப்போது விஷால் பேசிய பேச்சுதான், நேற்று சிம்பு அளித்த பேட்டியில் ஆங்கிலத்தில் சொல்லி கிண்டல் செய்தது. மேலும், சக நடிகரான ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று கேட்டுள்ளாரே? அவருக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவருக்கு அதைப் புரிய வைக்கவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என தெரிவித்தார்.