வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (13:49 IST)

காவல் நிலையத்துக்கு நைட்டி அணிந்து வரக்கூடாது!? - திருப்பூர் போலீஸ் வினோத கட்டுப்பாடு

உடைக்கட்டுபாடு குறித்து நாடெங்கும் பல்வேறு விவாதங்கள், பிரதி வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் காவல் நிலையத்தின் வினோத அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர காவல்நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் ஆண்கள் லுங்கி, குட்டை ட்ராயர் ஆகியவற்றை அணிந்து வரகூடாது என்றும், பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வினோத கட்டுப்பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சிவில் நடவடிக்கைகளுக்காக காவல் நிலையம் வருவோர் மேற்சொன்னப்படியான உடைகளை பெரும்பாலும் காவல் நிலையத்திற்கு செல்லும்போது அணிவதில்லை. ஆனால் ஏதாவது குற்ற செயலோ அல்லது விபத்தோ ஏற்படும்போது சம்பந்தப்பட்டவர்கள் அடித்து பிடித்து காவல் நிலையத்திற்கு ஓடி வரும்போது உடை ஒழுங்கை கவனிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.