வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (16:07 IST)

திருச்சி சிவாவின் குடும்ப சண்டை தெருவுக்கு வந்தது!

திருச்சி சிவாவின் குடும்ப சண்டை தெருவுக்கு வந்தது!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனுக்கும், மருமகனுக்கு இடையே உள்ள குடும்ப சண்டை தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது.


 
 
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் கண்ணத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு சங்கடங்களை கொடுத்தது அவருக்கு. இந்நிலையில் அவருடைய குடும்ப சண்டையும் வீதிக்கு வந்துள்ளது.
 
திருச்சி சிவாவின் மகன் சூரியா தனது காரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாக அவரது மருமகன் முத்துக்குமார் சூரியா மீது தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.