1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (23:41 IST)

மருமகளை மிரட்டினாரா திருச்சி சிவா எம்பி. திடுக்கிடும் தகவல்

திமுக எம்பி திருச்சி சிவா தன்னை மிரட்டியதாக செய்தியாளர்கள் முன்னர் அவருடைய மனைவி பிரதியூஷா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


திருச்சி சிவாவின் மகன் மணிவண்ணன் என்பவரும் பிரதியுஷா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் திருச்சி சிவா, மருமகள் நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் மிரட்டியுள்ளதாக எழுந்துள்ள குற்றசாட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவாவின் மருமகள் பிரதியூஷா 'தான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனியாக வசித்து வரும் தங்களை காவல் அதிகாரிகளின் துணையுடன் திருச்சி சிவா மிரட்டுவதாகவும் பிரதியுஷாவும் புகார் தெரிவித்தார்.

இந்த புகாருக்கு விளக்கமளித்துள்ள சிவா, ' எனது மகனைவிட, மருமகளுக்கு கூடுதல் வயதாகிறது. இது எனக்கு மிகவும் கவலை தருகிறது. வயதாகும்போது, எனது மகனை பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமே எனக்கு வருகிறது. அதனால்தான் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஜாதி பாரபட்சம் எதையும் நான் பார்க்கவில்லை,’’ என தெரிவித்துள்ளார்.