வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 25 மே 2017 (12:03 IST)

நத்தம் விஸ்வநாதனுக்கு சிக்கல் - வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சூரிய மின்சக்தி (சோலார்) திட்டத்தில் அனுமதி பெற அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூ.50 லஞ்சம் கேட்டதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் லோகநாதன் என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதன் அடிப்படையில், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
 
தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் நத்தம் விஸ்வநாதனுக்கு, இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.