வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (22:43 IST)

தேமுதிகவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திருநங்கை ராதிகா

தேமுதிகவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திருநங்கை ராதிகா

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ராதிகா என்ற திருநங்கை மனு கொடுத்தார்.
 

 
தமிழகத்தில், விரைவில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் தங்களது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுவை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
 
இதனையடுத்து, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ராதிகா என்ற திருநங்கை விருப்ப மனு கொடுத்துள்ளார்.