வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (00:39 IST)

குரூப் 2 ஏ பணி மாறுதல்: இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் துவக்கம்

குரூப் 2 ஏ தேர்வு பதவிக்கான காலியாகவுள்ள 786 பணியிடங்களை நிரப்பும் வகையில், 2 ஆவது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி தேதி வரை நடைபெற உள்ளது.
 

 
இது குறித்து, டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
குரூப் 2 ஏ தேர்வு பதவிக்கான காலியிடங்களை நிரப்ப கடந்த 29.6.2014 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டன.
 
இதற்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில், காலியாகவுள்ள 786 பணியிடங்களை நிரப்பும் வகையில், 2 ஆவது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி தேதி வரை நடைபெற உள்ளது.
 
கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் அடங்கிய தற்காலிக பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
 
மேலும், கலந்தாய்வு தேதி, நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு இ மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வுக்கு வரும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.