வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (11:16 IST)

அதிமுக-வில் பிளவு இல்லை: கருந்து வேறுபாடு மட்டும்தான்: தம்பிதுரை புது விளக்கம்!!

அதிமுக-வில் பிளவு இல்லை கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது என எம்.பி, தம்பிதுரை புது விளக்கமளித்துள்ளார்.


 
 
அதிமுக மூன்று தலைமையில் மூன்று வெவ்வேறு அணிகளாக சிதறி கிடக்கின்றன. இதில் ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் சசிகலா குடும்பத்தை கட்சியைவிடு விலக்க முடிவு செய்து உள்ளனர்.
 
இந்த அணிகள் இணையவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், மறுபுறம் தினகரன் இந்த இரு அணிகளுக்கும் சவால்விட்டு வருகிறார்.
 
இது குறித்து தம்பிதுரை பேசியதாவது, அதிமுக-வின் பொதுச் செயலாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் நிலவி வருகிறது. 
 
அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு காரணமாக அணிகள் தனித்தனியாக செயல்பட்டுவருகின்றன. அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது என தெரிவித்துள்ளார்.