1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (17:51 IST)

கருணாநிதி தலைமையில் டெசோ அவசரக் கூட்டம்

தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) அவசரக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுபவீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய நிலையில், டெசோ கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.