வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (13:21 IST)

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்: காவல்துறையினர் தடியடி

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பூந்ததமல்லி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.

அப்போது, ஹாரிங்டன் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்முடித்தனமாத் தாக்கினர்.
 
இதனால், மாணவர்கள் சிலருக்கு தலையிலும் உடலிலும் காயம் ஏற்பட்டது. அப்போது பல மாணவர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்றனர்.

மணவிகளை காவல்துறையினர் காலால் உதைத்தனர். அப்போது காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்ட ஒரு மாணவி மயக்கமடைந்தார்.
 
இதனால், அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்படடுள்ளது. இதனால் பதற்றம் நிலவுகிறது.