வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (05:42 IST)

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கைது

மதுக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கைது செய்யப்பட்டார்.
 

 
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று காந்தியவாதி சசிபெருமாள் செல் போன் டவர் மீது ஏறி நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் உயிரிழந்தார்.
 
இதனையடுத்து, அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஆனால், அந்த கடையை பள்ளியாடி பகுதியில் மாற்ற மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்வதாக தகவல் வெளியானது.
 
 
இதனைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்ட சுமார் 50 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விஜயதாரணி மற்றும் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.