நாங்கள் தான் மனித நேய மக்கள் கட்சி - தமிமுன் அன்சாரி
சென்னை தாம்பரத்தில் மனித நேயா மக்கள் கட்சித் தலைவர் ரீபாயீ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், தமிமுன் அன்சாரியை பொறுப்பில் இருந்து நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஆருண் ரஷீத்தும் நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இவர்கள் இருவரும் மனித நேய மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புரசைவாக்கத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தமிமுன் அன்சாரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போழுது கூறுகையில்: தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக பேராசிரியர் ஜவாகிருல்லா கூட்டியது உண்மையான பொதுக்குழு கூட்டம் அல்ல. எங்களை நீக்கியது சட்டவிரோதம். நாங்கள்தான் சட்டப்பூர்வமான மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், அடுத்தகட்ட எங்களது நடவடிக்கை குறித்து என்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்போம்.
தற்போழுது, ஜவாகிருல்லா கட்சியில் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் அல்லும் பகலும் கடுமையாக உழைத்ததால் தான் அவர் இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். என்று அவர் குறிப்பிட்டார்.