செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (05:18 IST)

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: தமிழக மீனவர் பரிதாப பலி

இதுவரை தமிழக மீனவர்களை கைது செய்தும், வலைகளை பிடுங்கியும் தொல்லை கொடுத்து கொண்டிருந்த இலங்அகி கடற்படை நேற்று துப்பாக்கி சூடு நடத்தியதால் தமிழக மீனவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவர் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.





நேற்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு குழுவாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது இந்திய எல்லையான ஆதம்பாலம் என்றா பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டினர்.

ஆனால் தமிழக மீனவர்கள் இந்த பகுதி இந்திய பகுதியே என வாக்குவதாக செய்ய, திடீரென  தமிழக மீனவர்கள் மீது, கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த மீனவர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ(22) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் காயமடைந்த டிட்டோ என்ற மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த சம்பவத்தால் மீனவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.