செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (23:29 IST)

காவல்துறைக்கு ரூ 136.83 கோடி மதிப்பீட்டில் சலுகைகளை வாரி வழங்கிய ஜெயலலிதா

தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா சலுகைகளை வாரி வழங்கியுள்ளார்.
 

 
தமிழக சட்ட சபையில், இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை நடைபெற்றது. இதில், விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
 
அப்போது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காவலர் குடியிருப்பு உள்பட காவல் துறையினருக்கு பல சலுகைகளை அறிவித்தார்.மேலும், தீயணைப்பு துறையினரும் அதிக அளவில் பயன் அடையும் வகையிலும் திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தார்.
 
ஆக, மொத்தம், காவல் துறையினருக்கு 82 சலுகைகளையும், தீயணைப்பு துறையினருக்கு 11 சலுகைகளையும் ரூ 136.83 கோடி மதிப்பீட்டில் 93 சலுகைகளையும், வாரி வழங்கினார். இதனால், தமிழக காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.