வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2015 (19:15 IST)

பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் தனி அறை: ஜெயலலிதா உத்தரவு

பாலூட்டும் தாய்மார்களுக்காக பேருந்து நிலையங்களில் தனி அறை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக தாய் பாலூட்டும் வாரமான ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த புதிய திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகர பேருந்து  நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். 
 
பேருந்து நிலையங்களில் காத்திருக்கும்  தாய்மார்கள் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டும் வசதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.