வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (10:37 IST)

தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 15 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.


 

 
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 
 
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்று வளைத்தனர். 
 
பின்னர், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 15 மீனவர்களையும் அவர்களின் 3 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர்.