1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (13:51 IST)

சுவாதியை கொலை செய்தவன் கைது: வதந்தி என காவல் துறை தகவல்

தமிழகத்தையே உலுக்கிய சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.


 
 
இந்நிலையில் நேற்று இரவு அந்த கொலையாளியை காவல் துறையினர் கைது செய்ததாக ஒரு தகவல் பரவியது. சென்னை திருவான்மியூரில் வைத்து காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்ததாக கூறப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
 
இதனையடுத்து இந்த தகவல் வெறும் வதந்தி என காவல் துறை தரப்பில் மறுத்துள்ளனர். அதே நேரத்தில் சுவாதியை கொலை செய்தவனை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் கைது செய்வோம் எனவும் காவல் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இந்த கொலை தொடர்பான முக்கியமான தகவல்களும், குற்றவாளி தொடர்பான தகவல்களும் இன்று வெளியாகும் என செய்திகள் பரவி வருகிறது. இதனால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு எகிறியுள்ளது.