1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (15:11 IST)

பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

ராஜபாளையம் அருகே பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
 
ராஜபாளையம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் கோட்டரக்கன். இவர் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கோட்டரக்கன் செப், 22 (நேற்று) இரவு சுமார் 9 மணியளவில் தனது அறைக்கு சென்று புத்தகம் ஒன்று எடுத்து வருவதாக தன் நண்பர்களிடம் கூறி விட்டு சென்றார்.
 
நீண்ட நேரமாகியும் கோட்டரக்கன் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் கோட்டரக்கன் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்றனர். நீண்ட நேரம் கூப்பிட்டும் அறைக்கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 
 
அப்போது கோட்டரக்கன் மயங்கிய நிலையில் விழுந்துகிடந்தார். அவரது கழுத்தில் தூக்கு கயிறு இருந்ததைப் பார்த்த அவரது நண்பர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோட்டரக்கன் இறந்து விட்டதாக கூறினர்.
 
இது குறித்து அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.