வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (11:41 IST)

மு.க.ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு - சட்டசபையில் கூச்சல்

தமிழக முதல்வராக தேந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க, தற்போது தமிழக சட்டசபை கூடியுள்ளது.


 

 
சட்டசபை கூடியதும், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்மொழிந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணியினர் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கோஷமிட்டு வருகின்றனர். எனவே, சட்டசபையில் கடுமையான அமளி ஏற்பட்டுள்ளது. 
 
அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே ஜனநாயகம் பாதுகாக்கப்படும் எனக் கூறினார். ஒன்று ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள். இல்லையேல், வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
வெளிப்படையான வாக்கெடுப்பே நடத்தப்படும் என சபாநாயகர் தனபால் கூறிவிட்டார்.