நாங்களும் ஆடுவோம்ல...பழங்குடி மக்களுடன் ஸ்டாலின் நடனம்
நமக்கு நாமே பயணத்தின் இரண்டாவது கட்டத்தை மு.க.ஸ்டாலினின் நீலகிரி மாவட்டத்தில் இன்று தொடங்கினார்.
அவருக்கு படுகர் இன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டார். இதனைத் தொடர்ந்து நீலகிரி ஷீட்டிங் மட்டத்தில் தோடர், கோத்தர் இன மக்களுடன் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது பழங்குடி மக்களுடன் ஸ்டாலின் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தார். இதனைக் கண்ட அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.