1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 21 மே 2015 (10:43 IST)

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - வழக்கம் போல் மாணவிகளே ஆதிக்கம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் போது எல்லாம், மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துவருகின்றனர்.
தமிழகம் முழுக்க 11, 15, 906 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 10 ம்வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. தேர்வு முடிகளை அரசுதேர்வுகள்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டார்.
 
இந்த ஆண்டு மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 90.7 என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடதக்கது.