வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 21 மே 2015 (10:19 IST)

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில், அரசு பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் 3 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
 
தமிழகம் முழுக்க 11, 15, 906 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 10 ம்வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. தேர்வு முடிகளை அரசுதேர்வுகள்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டார்.
 
இதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மூன்று பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். வாழப்பாடியைச் சேர்ந்த ஜெயனந்தனா, பெரிம்பலூர் மாவட்டம், பரணம்த்தைச் சேர்ந்த பாரிதிராஜா, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஸ்ணவி என்ற மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.