1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 21 மே 2015 (10:14 IST)

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநிலத்தில் 41 பேர் முதலிடம் பெற்று சாதனை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில், மாநிலத்தில் 41 முதலிடம் பெற்றுள்ளனர். 
 
தமிழகம் முழுக்க 11, 15, 906 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 10 ம்வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. தேர்வு முடிகளை அரசுதேர்வுகள்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டனர்.
 
தமிழை முதன்மைப்பாடமாக எடுத்து, 500 க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து, 41 மாணவர்களும், 500 க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து, 192 மாணவர்களும், 500 க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து, 540மாணவர்களும் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்றனர்.