வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (17:28 IST)

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இம்மாதம் 2ஆம் தேதி கோடியக்கரையில் இருந்து 7 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
 
அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையால் அந்த 7 மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர்.
 
சிறை பிடிக்கப்பட்ட அந்த மீனவர்களிடமிருந்து விலை உயர்ந்த இறால் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், சிறை பிடிக்கப்பட்ட அந்த 7 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மீனவர்கள் இரவு 10 மணியளவில் கோடியக்கரைக்கு வருவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.