வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (22:39 IST)

மகாமகத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்

மகாமகத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்

கும்பகோணம் மகாமகத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

 
தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகத் திருவிழா கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இந்த விழா பிப்ரவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து 1.30 மணிக்குள், கொடியேற்றத்துடன் தொடங்கிறது. இந்த விழாவில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்த திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில், விழுப்புரம், சென்னை ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.