செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:03 IST)

மோடியைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டம்!

மோடியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் இன்று சென்னையில்ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்.
 
நரேந்திர மோடி சென்னையில் நடைபெற்ற தேர்தல் கூட்டதில் பேசியபோது மத்திய ஐக்கிய முன்னணி அரசை குருடன், நொண்டி, செவிடன், ஊமை அரசு என்று மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக பேசியுள்ளார்.
 
அவருடைய இத்தகைய பேச்சை கண்டித்து மாநில தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென் சென்னை மாவட்டத்தின் சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை அனகாபுத்தூரில் இன்று காலை இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது