வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (10:37 IST)

சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக்கொண்டு மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் - விஜயகாந்த்

சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக்கொண்டு, தேமுதிகவினர் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கே' என்ற கொள்கை முழக்கத்துடன் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் எனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஏழை எளியோருக்கு நல உதவிகள் செய்து வருகிறேன்.

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் நலிவுற்ற குடும்பங்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளேன்.

மேலும் எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு உதவிடும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் வழங்குவதைப் போல் இந்த ஆண்டும் ரூ.50 ஆயிரம் வழங்க உள்ளேன்.

இதைப்போல தேமுதிகவின் மாவட்ட நிர்வாகிகளும் ஏழைகளுக்கு இயன்ற நல உதவிகளை வழங்க வேண்டும். ஆளும் கட்சியினரால் பல்வேறு இன்னல்களையும், வழக்குகளையும் சந்தித்து வரும் தேமுதிகவினர் தமக்கு ஏற்படும் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி, தமிழக மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றுவோம்“ என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.