வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (22:11 IST)

'மகனை கண்டுபிடித்து தர வேண்டும்' - நரபலி குறித்து மேலும் ஒரு புகார்

வக்கீலுக்கு படித்த எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட இ.மலம்பட்டியை அடுத்துள்ள சின்னமலம்பட்டி மணிமுத்தாறு பகுதியில் தோண்டும் பணி தொடங்கியது.
 
சட்ட ஆணையர் உ.சகாயம் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பணியின் போது எலும்புக் கூடுகளும், எலும்புத் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
 
இந்நிலையில், மேலூர் மாவட்டம் ஏ.வள்ளாலபட்டியை சேர்ந்த ஓய்யம்மாள் என்பவர், கடந்த 2006ம் ஆண்டு முதல் வக்கீலுக்கு படித்த எனது மகன் மலையாண்டி என்பவரை காணவில்லை.
 
நரபலி தொடர்பான புகாரில் எங்களையும் இணைத்து எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியுள்ளார்.