வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (04:35 IST)

ஆர்கேநகர் தொகுதிக்கு தனித் தேர்தல் அறிக்கை: தினகரன் திட்டம்

சென்னை ஆர்.கே.நகரில் சசிகலா ஆதரவு அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் மக்களுக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.



 


வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக சசிகலா ஆதரவு அணி வேட்பாளராக டிடிவி தினகரன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ், தீபா பேரவை வேட்பாளராக தீபா ஆகியோர் இப்போதைக்கு களத்தில் உள்ளனர். கூடியவிரைவில் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக வேட்பாளர் மற்றும் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கு தனித் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும், அத்தொகுதியில் களமிறங்கவுள்ள அதிமுக சசிகலா அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தினகரனின் இந்த திட்டம் மக்களிடம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்