1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (17:47 IST)

காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து 7 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவரான நிலக்கோட்டை பொன்னம்மாள் மதுரை அரசு மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


 
 
சுவாசக்கோளாறு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக நிலக்கோட்டை ஏ.எஸ். பொன்னம்மாள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் பொன்னம்மாள் உயிரிழந்தார். இவருக்கு தற்போது வயது 88 ஆகும்.
 
அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள அழகம்பட்டியில், நாளை பிற்பகல் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று உறவினர்கள் கூறியுள்ளனர். 
 
மதுரை மாவட்டம் சோழவந்தான், திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் நிலக்கோட்டை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக 7 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.