வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh

விநாயகரும்! தோப்புக்கரணமும்!

விநாயகருக்கு ஏன் தோப்புக்கரணம் போடுகிறோம் என்று பலருக்கும் தெரியாது.


 


தோப்புக்கரணத்திற்கு ஒரு அறிவியல் பூர்வமான காரணமும் உள்ளது. உடலின் பல பாகங்களில் இருக்கும் நரம்புகள் காது மடல்களில் வந்து இணைக்கப்பட்டிருக்கும். தோப்புக்கரணம் போடும்போது இடது காதை வலது கையாலும், வலது காதை இடது கையாலும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுவோம். அவ்வாறு காதுகளை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழும்போது காது நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் உடலின் பல பாகங்களும் உற்சாகமடைந்து நல்லவிதமாக செயல்படும்.

தோப்புக்கரணம் போடும் முன்னதாக இடது கை வலப்புறமும், வலக்கை இடதுபுறமுமாக நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது வழக்கம். இவ்வாறு குட்டிக்கொள்வது கூட ஒரு தூண்டுதல் விசையை ஏற்படுத்துவதற்காகத்தான். இதனால் நரம்புகள் தூண்டப்பட்டு மூளைக்கு புது ரத்தம் பாயும். அதனால் புத்துணர்ச்சி ஏற்பட்டு நல்ல சிந்தனைக்கு வழிவகுக்கும்.