1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (04:36 IST)

திருமணத்திற்கு மறுத்த பள்ளி மாணவிக்கு 17 இடங்களில் கத்திக்குத்து

திருமணத்திற்கு மறுத்த பள்ளி மாணவியின் உடலில் 17 இடங்களில் கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
 

 
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படிப்பவர் நந்தினி. இன்று காலை வழக்கம் போல் பள்ளி வந்த மாணவி நத்தினி பள்ளி நேரம் முடிந்த பின்பு மாலையில், சோமாத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
 
அப்போது, காந்தி சிலை அருகே, நந்தினியின் வருகைக்காக காத்திருந்த ஒரு இளைஞர், நந்தினி வந்த போது, அவர் மீது வெறியுடன் பாய்ந்து, அரது உடலில் 17 இடங்களில் கத்தியால் மாறிமாறிக் குத்தினார். வலியால் அலறித்துடித்த அந்த மாணவி, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
 
இதைக் கண்ட  அக்கம் பக்கத்தினர் மாணவி நந்தினியை, காப்பாற்றி சிவகங்கை அரசு மருத்துவமயில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும், மாணவியை நந்தினியை கத்தியால் குத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸ், விசாரணையில், அந்த மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆனால், தனக்கு படிக்க வேண்டும் என்று திருணத்திற்கு மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரம் கொண்ட அந்த இளைஞர் மாணவியை கத்தியால் குத்தியது தெரிய வந்தது.  
 
பள்ளி மாணவிக்கு 17 இடத்தில் கத்தி குத்து நடைபெற்ற சம்பவம்  அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.