வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (07:48 IST)

வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர்

புதுச்சேரியில், வீட்டில் தனியாக இருந்த, 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவருக்கு வயது 21. லாரி டிரைவரான இவர் கோரிமேட்டில் உள்ள தனது நண்பரை பார்க்க அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அந்த நண்பரின் வீட்டுக்கு அருகில் பிளஸ்–1 படிக்கும் மாணவி ஒருவர் இருப்பதை தெரிந்துகொண்டார். 
 
இந்நிலையில், அவரது மற்றொரு நண்பரான லாஸ்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் கோரிமேட்டில் உள்ள நண்பரை பார்க்க வந்தார். அப்போது, அந்த மாணவி வீட்டில் தனியாக இருப்பதை பார்த்துள்ளார். 
 
இதைத் தொடர்ந்து. ஆறுமுகம் தனது நண்பரை வெளியில் காவலுக்கு இருக்க சொல்லிவிட்டு மாணவியின் வீட்டிற்குள் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் ஆறுமுகமும், விக்னேசும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
 
மாணவியின் பெற்றோர் வீடு திரும்பியதும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து  அவர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர். அத்துடன் அந்த மாணவிக்கு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் கவுன்சிலிங் அளித்தனர். அவர்களது அறிவுறுத்தலின்பேரில் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
 
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோரிமேடு காவல்துறையினர், ஆறுமுகம், விக்னேஷ் ஆகியோரை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் நேற்று கைதுசெய்தனர்.