வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2016 (18:46 IST)

ஜெயலலிதா மீதான வழக்கு - இறந்துவிட்டதால் காலாவதி!

ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு ஒன்றை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன்மீது விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜவேலு என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

ஜெயலலிதா மக்கள் பிரதிநிதி என்பதால் அவரை அரசு ஊழியராக கருதக்கூடாது என்றும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று, அந்த மனுவில் ராஜவேலு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் யு.யு.லலிதா அமர்வு மனுவை விசாரித்தது.

அப்போது, ஜெயலலிதா இறந்துவிட்டதால், மனு காலாவதியாகி விட்டது என்று கூறிய நீதிபதிகள், ராஜவேலுவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.