வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2016 (20:27 IST)

ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா திடீர் விசிட்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அவரின் தோழியான சசிகலா இன்று மாலை சென்று அஞ்சலி செலுத்தினார்.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
 
இதையடுத்து, 6ம் தேதி அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
தற்போது பொதுமக்கள் ஏராளமனோர், 24 மணி நேரமும் அவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில அதிமுக விசுவாசிகள் அங்கேயே மொட்டையும் அடித்து கொண்டு தங்கள் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர். ஏராளமானோர் அழுத வண்ணம் அவரின் சமாதியின் அருகிலேயே உலவி வருகின்றனர்.


 

 
இந்நிலையில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா இன்று மாலை அவரின் சமாதிக்கு வந்து அழுத வண்ணம் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரின் உறவினர் இளவரசியும் மற்றும் சில குழந்தைகள் இருந்தனர்.
 
சிறிது நேரம் அவருக்கு மௌனமாக நின்று ஜெ.விற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து அவர் கிளம்பிச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.