கண்ணீர் விட்டு அழுத சசிகலா
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கண்னீர் விட்டார்.
அம்மா எவ்வளவு வலியைத் தாங்கினார்கள் என எனக்கு மட்டுமே தெரியும். அம்மா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார். அம்மா மறைந்த போது நான் அனுபவித்த வேதனை எனக்கு மட்டுமே தெரியும். நான்தான் இத்தனை ஆண்டுகளாக அம்மாவைப் பார்த்துக்கொண்டேன்.
நான்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என கட்சியினர் கேட்கின்றனர். நூறு சதவீதம் நான்தான் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்பேன், என்றார்.