வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : சனி, 28 ஜனவரி 2017 (11:51 IST)

திமுகவை மறைமுகமாக தாக்கிய சசிகலா

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சசிகலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சசிகலா,

 

நமக்கு எதிரான கட்சி நம்மை பிரித்து அழிக்க முயற்சி செய்கிறார்கள்.அது  நடக்காது. அம்மாவின் கொள்கைகளையும், எண்ணத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை இப்பொழுதே துவக்கவேண்டும் என்று பேசினார்.
 
நம் எதிரி கட்சி என்று சசிகலா பேசியது திமுகவை தான் என்று அதிமுக கூட்டத்தில் பேச்சு எழுந்தது. இதனை அவர் நேரிடையாகவே கூறியிருக்கலாமே என்றும் பேசிக்கொண்டனர்.