செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (22:11 IST)

சரத்குமார் மீண்டும் தலைவராக தேர்வு

சரத்குமார் மீண்டும் தலைவராக தேர்வு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
 

 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நெல்லையில் இன்று காலை 11 மணிக்கு, நெல்லை கே.டி.சி. நகர் மாதா மாளிகையில்  நடைபெற்றது.
 
பொதுக்குழு கூட்டத்தில், சமக தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொது செயலாளராக ஜெயபிரகாஷ்-ம், பொருளாளராக சுந்தரேசனும், மகளிரணி செயலாளராக ராதிகாவும் தேர்வு செய்யப்பட்டார்.
 
பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து  மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.