1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 20 ஜூன் 2015 (03:21 IST)

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 2ஆவது இடத்தைப் பிடித்த ஜெயலிலதா

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான
மின்னணு எந்திரங்களில், வேட்பாளரின் புகைப்படத்துடன், பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்ட பட்டியல் வரிசையில், அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா  2 ஆவது இடம் பிடித்துள்ளார்.
 
சென்னை, புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு, வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், தேர்தல் பார்வையாளர் ஜோதி கலாஷ், மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான விக்ரம் கபூர், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் ஆகியோர் முன்னிலையில், வேட்பாளர்கள் புகைப்படத்துடன் கூடிய சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணியை தேர்தல் ஊழியர்கள் செய்தனர்.
 
பின்பு, 460 வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களிலும் வேட்பாளரின் புகைப்படத்துடன் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை மின்னல் வேகத்தில் நிறைவு செய்தனர்.
 
இந்த மின்னணு எந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படத்துடன் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்ட பட்டியல் வரிசையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் புகைப்படமும், பெயரும், சின்னமும் 2 ஆவது வரிசையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.