வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 29 ஜூன் 2015 (08:21 IST)

ஆர்.கே நகர் தொகுதியின் ஒரு வாக்கு சாவடியில் மறு வாக்குப் பதிவு

இடைத்தேர்தல் நடைபெற்ற ஆர்.கே நகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப் பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
 
இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 181 வது எண் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 
அங்கு, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத பலர் அந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாக புகார் வந்ததையடுத்து, அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், அங்கு மறு வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றது. நாளை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.