வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel

போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் - ஜி.கே.வாசன்

போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் வாக்களர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கியே ஆவேண்டும் என ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திருத்துறைப்பூண்டியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக சட்ட மனறத் தேர்தலுக்கு மிக குறுகிய காலமே உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்பட்டியலை சரிபார்த்து போலி வாக்காளர்களை கண்டறிந்து  தேர்தல் ஆணையம் நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் மலரும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுக்கும் என நம்புகிறேன்.
 
தமாகா எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என இப்போதே சொல்ல முடியாது. ஆனால், தமிழகத்தில் வெற்றி பெறும் கூட்டணியுடன் தமாகா கூட்டணி அமைக்கும் என்றார்.