வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bharathi
Last Modified: ஞாயிறு, 25 அக்டோபர் 2015 (13:04 IST)

மீனவர்கள் விடுதலை அறிவிப்பு எதிரொலி: வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுகின்றனர் ராமேஷ்வரம் மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 86  விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்ததை தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ராமேஷ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.


 
 
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 8 படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஷ்வரம் மீனவர்கள்  கடந்த இரு தினங்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்நிலையில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 86 மீனவர்கள்  வரும் 28 ஆம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக தமிழக அரசு இன்று தெரிவித்தது.
 
இதனைத் தொடர்ந்து அவசர கூட்டத்தை கூட்டிய மீனவ சங்கப் பிரதிநிதிகள் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.